கோவையில் திகுதிகு... ரயிலை மறித்து போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள்
கோவையில் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
கோவை: அனிதா மரணத்துக்கு நீதி கோரி கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வால் மருத்தும் படிக்க முடியாமல் போன அரியலூர் குழுமூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டனர். அனிதாவின் தற்கொலை மொத்த தமிழகத்தையும் மட்டுமில்லாது உலகில் தமிழர்கள் வாழும் பகுதியில் பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.

அதனால் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போராடி வந்த நிலையில் தற்போது பள்ளி மாணவர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications