ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது.. கல்லூரி மாணவர்களிடம் பரவிய போராட்டம்
Recommended Video

ம்பகோணம்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பு நடத்தினர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணத்தில் உள்ள அரசினர் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் இன்று ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கல்லூரி நுழைவாயிலில் மாணவ மாணவியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. அதை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க கூடாது என்பது மாணவ, மாணவிகள் கோரிக்கையாகும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம், கும்பகோணம், கல்லூரி மாணாக்கர்கள் வரை பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications