போராட்டக்காரர்கள் மீது தடியடி.. போலீசாரை கண்டித்து கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரிகளுக்கு வந்த மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுர்: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்ததையடுத்து தமிழக அரசு பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இன்று கல்லூரிக்கு வந்த பொன்னேரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

இதே போன்று சென்னையில் மெரினா கடற்கரைப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
இந்தப் பகுதியில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கல்வீச்சும் நடத்தினார்கள். இதனையடுத்து, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்டப் பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றன.
எனவே, இந்தப் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தாலும் மாணவர்கள் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கலவர பூமி போல காட்சி அளிப்பதால் இப்பகுதியில் வசிப்பவர்கள் பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாமல் வீட்டிற்குள் வைத்துள்ளனர்.
மெரினா கடற்கரை பகுதியில் ராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி, லேடி விலிங்டன் மேல் நிலைபள்ளி, மார்டன் பள்ளி உள்ளிட்ட மிக முக்கியமான கல்விக் கூடங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications