தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார்.. விஜயேந்திரரை கைது செய்யுங்கள்.. போலீஸில் புகார்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்துவிட்டார் என விஜயேந்திரர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நூலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உடபட அனைவரும் எழுந்து நின்றனர்.

ஆர்வலர்கள் கொந்தளிப்பு
ஆனால் விஜயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்தார். இது தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸில் புகார்
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததற்காக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரரை கைது செய்யக்கோரி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயேந்திரர் மீது புகார்
ஹனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த ராமபூபதி என்பவர் சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்யனும்
தமிழக அரசு சின்னங்களை விஜயேந்திரர் அவமதித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சின்னங்களை அவமதித்துவிட்டதாக விஜயேந்திர மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்றும் ராமபூபதி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரரை கைது செய்யுங்கள்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் அவமதித்த வழக்கில் உடனடினயாக விஜயேந்திரரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications