சார், எங்க டீக்கடைக்கு 6 மாசமாக கடன் பாக்கி.. போலீஸ் ஸ்டேசன் மீது சிஎம் செல்லுக்கு போன புகார்
கள்ளக்குறிச்சி: சார், எங்க டீக்கடைக்கு 6 மாசமாக டீக்குடித்த பணத்தை கொடுக்காமல் கடன் பாக்கி வைச்சிருக்காங்க.. போலீஸ் ஸ்டேசனில் இருந்து 5000 ரூபாய் பணம் தரனும்.. தயவு செய்து வாங்கி கொடுங்க என்று முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் என்ற ஊரில் காவல் நிலையம் செயல்படுகிறது. இந்த காவல் நிலையம் கல்வராயன் மலைபகுதியில் நடக்கும் குற்றசம்பவங்களை விசாரிக்கும் முக்கியமான காவல் நிலையமாகும். இந்த கரியாலூர் காவல் நிலையத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் என்று மொத்தம் 10 போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள்.

கரியாலூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள், போலீஸ் ஸ்டேசன் பக்கத்திலேயே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். ஆனால் அதற்கு உரிய முறையில் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது 6 மாத கடன் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், போலீசார் டீக்கடையில் கடன் வைத்த விவகாரம் சிஎம் வரை கொண்டு போகப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புகாராக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற இந்த புகார் நேற்று கரியாலூர் காவல் நிலையத்திற்கும் கடைசியாக வந்துள்ளது. அதில் கடந்த 6 மாதங்களாக காவலர்கள் குடித்த டீக்கு ரூ.5 ஆயிரம் வரைக்கும் கடன் உள்ளது. இதை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கரியாலூர் காவலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதுதொடர்பாக உடனடியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் அமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு டீக்கடை உரிமையாளர் தரப்பில் இருந்து புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டதா? அல்லது காவல் நிலையத்தில் உள்ள யாராவது அனுப்பி வைத்தார்களா என்பது தெரியவில்லை. விசாரணைக்கு பின்னரே என்ன நடந்தது என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிகாரிகள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications