சேது சமுத்திர திட்டம்- இப்போ பேசும் ஜி.கே.வாசன் அப்போ ஏன் செய்யலை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சேது சமுத்திர திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவுத் திட்டம் மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக தமிழகம் மற்றும் இந்தியாவை உயர்த்தக்கூடிய ஒரு நல்ல திட்டம்.

பல வருடங்களாக இத்திட்டம் தடைபட்டு இருப்பதன் காரணம் உச்ச நீதிமன்றத்திலே இது சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருந்தது. நேற்றைய தினம் மத்திய அமைச்சர் சேது சமுத்திரத்திட்டத்தின் வழிகளை ஆய்வு செய்து மாற்றுப் பாதையில் செயல்படுத்தப்படும் என்று கூறி இருகிறார்.

Complete Sethu Samuthiram project: Vasan

பா.ஜ.க. அரசு இத்திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை தாமதப்படுத்தியதற்கு யார் காரணம் என்பதை உணர்ந்து ஒரு காலக்கெடுவிற்குள் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக 5 ஆண்டுகள் இருந்தபோது வாசன் இதை ஏன் செய்து முடிக்கவில்லை?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+