காயலான் கடைக்கு போகும் நிலையில் அரசு பஸ்கள்.. ரிஸ்க் எடுத்து ஓட்டும் டிரைவர்கள்.. பீதியில் பயணிகள்
நெல்லை: நெல்லை அருகே காயலான் கடைக்கு போட வேண்டிய நிலையில் உள்ள அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் பீதியில் உறைந்து பயணம் செய்து வருகின்றனர்.
நெல்லை அருகே வள்ளியூர் பணிமனையில் இருந்து நாகர்கோவில், நெல்லை மற்றும் வள்ளியூர் சுற்று வட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளதால் மழையின் போது தண்ணீர் வாகனத்திற்குள் விழுகிறது. இதனால் பணிகள் பேருந்திற்குள் குடை பிடித்தவாறு பயணிக்க வேண்டி உள்ளது.

பெரும்பாலான பேருந்துகளில் ஜன்னல் கண்ணாடிகள் இல்லை. சில பேருந்துகளில் மட்டும் தகரங்களை கொண்டு அடைந்துள்ளனர். மேலும் பல பேருந்துகளில்இருக்கைகள் இல்லை. வெறும் கம்பிகள் மட்டுமே உள்ளது. இதில் உட்கார்ந்தால் உருப்படியாக வீடு போய் சேர முடியாது என்பதால் பயணிகள் திகிலில் நின்றபடியே பயணம் செய்து வருகின்றனர்.
இந்த காரணங்களினால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த பேருந்துகளை தவிர்த்து தனியார் வேன், லாரிகளில் தொங்கிக் கொண்டு ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
இது குறித்து வள்ளியூர் பேருந்து நிலையத்தை சேர்ந்த சிலர் கூறுகையில்,
சமீபகாலமாக இந்த ஓட்டை உடைசல் பேருந்துகளை டிரைவர்கள் இயக்கி வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற பேருந்துகளை பற்றி சொல்லவே வேண்டாம், அந்த அளவுக்கு பராமரிப்பு படுமோசமாக உள்ளது. அரசு இதில் தலையிடாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications