ஸ்டெர்லைட்.. வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
வாஞ்சிநாதனுக்கு மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் போராட்டதை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். அதேபோல, ஆலைக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகார அமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் பல்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளிலிருந்து முன்ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் அவரை கடந்த வாரம் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
அப்போது, தன்மீது பதியப்பட்ட வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்க கோரி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறையிலுள்ள வாஞ்சிநாதனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில்தான் தங்கியிருக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வேறு எந்த வழக்கிலும் வாஞ்சிநாதனை கைது செய்ய கூடாது என போலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications