ஸ்டெர்லைட்.. வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்.. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
வாஞ்சிநாதனுக்கு மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் போராட்டதை தூண்டியதாக கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற மக்கள் எழுச்சி போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக கூறி, தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். அதேபோல, ஆலைக்கு எதிராக கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகார அமைப்பின் சட்ட ஆலோசகரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதும் பல்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளிலிருந்து முன்ஜாமீன் வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் மனு தாக்கல் செய்தார். ஆனால் இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் அவரை கடந்த வாரம் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் அடைத்தனர்.
அப்போது, தன்மீது பதியப்பட்ட வழக்குகளிலிருந்து ஜாமீன் வழங்க கோரி, மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாஞ்சிநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி, சிறையிலுள்ள வாஞ்சிநாதனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மதுரையில்தான் தங்கியிருக்க வேண்டும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்க கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல வேறு எந்த வழக்கிலும் வாஞ்சிநாதனை கைது செய்ய கூடாது என போலீசுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications