ஜெ.வுக்காக அன்று சீருடையுடன் மொட்டை... இன்று உண்ணாவிரதம்: அதிரடி கான்ஸ்டபிள்
தேனி: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் உடன் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர் தற்போது ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. கொடி பறந்த காரில் போலீஸ் சீருடையுடன் வந்த வேல்முருகன் ‘அம்மா வாழ்க' என்று முழக்கமிட்டபடி இறங்கினார்.
ஜெயலலிதா பெற்ற வெற்றிக்காக, சீருடையில் மொட்டை அடிக்கும் ஒரு அடிமை.....ராமானுஜம், அடிமையாகும்போது, அந்த உரிமை காவலருக்கு இல்லையா என்ன ?
Posted by Shankar A on Tuesday, June 30, 2015
திடீரென்று அவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்தார். இவருடன் வந்த சிலரும் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அங்கு வந்த போலீசார் வேல்முருகன் உள்ளிட்ட 10 பேரை வேனில் ஏற்றி, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீஸ்காரர் வேல்முருகன் 2 நாட்களாக பணிக்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதே வேல்முருகன்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றபின்னர், தேனியில் போலீஸ் சீருடை அணிந்தபடி மொட்டை போட்டு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மோடி - ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையில் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications