ஜெ.வுக்காக அன்று சீருடையுடன் மொட்டை... இன்று உண்ணாவிரதம்: அதிரடி கான்ஸ்டபிள்
தேனி: தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யக்கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் உடன் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (42). இவர் தற்போது ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அ.தி.மு.க. கொடி பறந்த காரில் போலீஸ் சீருடையுடன் வந்த வேல்முருகன் ‘அம்மா வாழ்க' என்று முழக்கமிட்டபடி இறங்கினார்.
ஜெயலலிதா பெற்ற வெற்றிக்காக, சீருடையில் மொட்டை அடிக்கும் ஒரு அடிமை.....ராமானுஜம், அடிமையாகும்போது, அந்த உரிமை காவலருக்கு இல்லையா என்ன ?
Posted by Shankar A on Tuesday, June 30, 2015
திடீரென்று அவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கைது செய்யும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்தார். இவருடன் வந்த சிலரும் தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அங்கு வந்த போலீசார் வேல்முருகன் உள்ளிட்ட 10 பேரை வேனில் ஏற்றி, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
போலீஸ்காரர் வேல்முருகன் 2 நாட்களாக பணிக்கு வரவில்லை. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதே வேல்முருகன்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது, சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற்றபின்னர், தேனியில் போலீஸ் சீருடை அணிந்தபடி மொட்டை போட்டு காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மோடி - ஜெயலலிதா சந்திப்பை கொச்சைப்படுத்தி பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். கான்ஸ்டபிள் ஒருவர் சீருடையில் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications