மெரினாவில் உணர்ச்சி பொங்க பேசிய கான்ஸ்டபிள் மாயழகு சஸ்பெண்ட்டா? உண்மை என்ன?
Subscribe to Oneindia Tamil
சென்னை: மெரினா பீச்சில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வீராவேசமாக பேசியவர் கான்ஸ்டபிள் மாயழகு. ராமநாதபுரத்தை சேர்ந்த இவரது குடும்பம் வறட்சியால் மதுரைக்கு பிழைப்பு தேடி வந்ததாகவும், இவர் போலீசில் சேர்ந்ததாகவும் மைக்கில் பேசினார். மீடியாக்களில் அவரது பேச்சு வெளியானது. விவசாய பிரச்சினை பற்றியெல்லாம் பேசி தேசிய அளவில் கவனம் ஈர்த்தார்.
கடமையிலிருந்து மாயழகு தவறிவிட்டதாக ஒரு தரப்பும், இதில் பெரிய தப்பு ஒன்றும் இல்லை என்று மற்றொரு தரப்பும் கூறிவருகிறது. ஆனால் போராட்டக்காரர்கள் முழு ஆதரவும் மாயழகுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக இன்று இரவு சமூக தளங்களில் வைரலாக செய்தி பரவியது. இதுகுறித்து சென்னை காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, அந்த தகவல் வதந்தி என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications