கவுன்சிலர் சீட் ரூ.20 லட்சத்திற்கு ஏலம்... அதிகாரிகள் விசாரணையில் திடுக் தகவல்
திருநெல்வேலி: புளியங்குடி நகராட்சி கவுன்சிலர் பதவி 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல் பரவியதால் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதிமுகவை சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவரை சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்ய இரவு 9 மணி அளவில் ஊர் கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் நகராட்சி தலைவரை தங்கள் வார்டில் கவுன்சிலராக போட்டியின்றி தேர்வு செய்ய ரூ.20 லட்சம் வரை ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு புகார் பறந்ததையடுத்து, கலெக்டர் கருணாகரன் உத்தரவின் பேரில் கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், புளியங்குடி இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் இரவு ஊர் கூட்டம் நடந்த சிந்தாமணிக்கு விரைந்தனர். அங்கு ஊர் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் நிர்வாகிகளோ கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடக்கவில்லை என்றும், கோவில் திருவிழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக கூட்டம் நடந்ததாகவும் தெரிவித்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக கடையநல்லூர் தாசில்தார் நாகராஜன் கூறுகையில், சிந்தாமணி பகுதியில் அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஏலம் நடப்பதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் விசாரணை நடத்தினோம். ஊர் நிர்வாகிகள் வேறு நிகழ்ச்சிக்காக கூடியதாக சொல்கிறார்கள். ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் ஏலம் மற்றும் பேரம் நடக்காமல் இருக்க தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கவுன்சிலர் பதவிகளுக்கு ஏலம் விடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications