தூத்துக்குடி: இரும்பு ஏற்றி வந்த தோணி கடலில் மூழ்கியது- 6 பேர் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு 50 டன் இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த தோணி ஒன்று எதிர்பாராத விதமாக நடுகடலில் மூழ்கியது.
தூத்துக்குடியைச் சேர்ந்த நவீன் என்பவருக்குச் சொந்தமான தோணி ஒன்று மாலத்தீவில் இருந்து 50 டன் இரும்புத் தாதுக்களை ஏற்றி தூத்துக்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தது. தோணியை கேப்டன் அந்தோணியப்பா ஓட்டி வந்துள்ளார்.
தோணி தமிழக மற்றும் கேரள கடல் எல்லைப்பகுதியில் வந்த போது, திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தில் சிக்கியது. அதன் காரணமாக தோணி கடலில் மூழ்கியது. இதனை தொடர்ந்து அங்கு தத்தழித்த 6 ஊழியர்களை அப்பகுதி மீனவர்கள் காப்பாற்றினர்.












Click it and Unblock the Notifications