'தினகரன்' அலுவலகம் எரிப்பு வழக்கு: 12 பேரை ஆஜர்படுத்த சிபிஐக்கு கோர்ட் உத்தரவு!
மதுரை: மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந்தேதி ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ம் ஆண்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், ஊழியர்கள் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்தது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர்மனுதாரர்கள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது வழக்கில் தொடர்புடைய 3 பேர் தங்கள் மீதான பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்தனர். இந்நிலையில் பிடிவாரண்ட் உத்தரவை செயல்படுத்த சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந் தேதி ஆஜர்படுத்தவும், பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்த 3 பேருக்கும் பதில் அளிக்கவும் சிபிஐ-க்கு உத்தரவிட்டனர்.
-
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications