'தினகரன்' அலுவலகம் எரிப்பு வழக்கு: 12 பேரை ஆஜர்படுத்த சிபிஐக்கு கோர்ட் உத்தரவு!
மதுரை: மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந்தேதி ஆஜர்படுத்த சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் 2007-ம் ஆண்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில், ஊழியர்கள் முத்துராமலிங்கம், கோபி, வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி உள்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்தது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத எதிர்மனுதாரர்கள் 12 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அப்போது வழக்கில் தொடர்புடைய 3 பேர் தங்கள் மீதான பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்தனர். இந்நிலையில் பிடிவாரண்ட் உத்தரவை செயல்படுத்த சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், ஜி.சொக்கலிங்கம் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில் புதிய பிடிவாரண்ட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 12 பேரையும் மார்ச் 11-ந் தேதி ஆஜர்படுத்தவும், பிடிவாரண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி மனு செய்திருந்த 3 பேருக்கும் பதில் அளிக்கவும் சிபிஐ-க்கு உத்தரவிட்டனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications