திருவாரூரில் கருணாநிதியை எதிர்த்து மாசிலாமணி போட்டி- 25 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது இ.கம்யூ.
சென்னை: திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக- மக்கள்நலக் கூட்டணி- தமாகா அணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
திருவாரூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக மாசிலாமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:
மாதவரம்- ஏ.எஸ். கண்ணன்
சைதாப்பேட்டை- ஏழுமலை
குடியாத்தம்- லிங்கமுத்து (தற்போது எம்.எல்.ஏ.)
தளி- ராமச்சந்திரன்
கீழ்பொன்னத்தூர் - கு. ஜோதி
பென்னாகரகம்- நஞ்சப்பன்
வீரபாண்டி- ஏ. மோகன்
திருப்பூர் வடக்கு- ரவி என்ற சுப்பிரமணியம்
வால்பாறை- மணிபாரதி (பத்திரிகையாளர்)
ஒட்டன்சத்திரம்- சந்தானம்
ஸ்ரீரங்கம்- புஷ்பம் வைத்தியநாதன்
பவானி சாகர்(தனி)- சுந்தரம்
அவினாசி- எம். ஆறுமுகம்
நாகை- தமிமுன் அன்சாரி
திருத்துறைப்பூண்டி(தனி)- உலகநாதன்
திருவாரூர்- மாசிலாமணி
அறந்தாங்கி- லோகநாதன்
பேராவூரணி- தமயந்தி திருஞானம்
திருப்பத்தூர்- சாத்தையா
சிவகங்கை- குணசேகரன்
மதுரை கிழக்கு- காளிதாசன்
திருப்பரங்குன்றம்- கந்தசாமி
ஸ்ரீவில்லிபுத்தூர்- லிங்கம் (முன்னாள் எம்பி)
அருப்புக்கோட்டை - செந்தில்குமார்
வாசுதேவநல்லூர்(தனி) சமுத்திரகணி