நாங்க சகாயத்திற்கு அனைத்து ஆதரவையும் தருவோம் - நல்லகண்ணு
சிவகாசி: மதுரை மாவட்ட கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தவுள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் தருவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்தியாவில் இயற்கை வளங்கள் பல ஆண்டுகளாக அழிக்கப்பட்டு வருகிறது. அரசும் இதற்கு துணை போகிறது. கிரானைட் மோசடி தொடர்பான சகாயம் விசாரணைக் குழுவுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுக்கும்.
கச்சத்தீவினை இலங்கைக்கு தாரை வார்த்த பிறகு இதுவரை 600-க்கும் மேற்பட்டவ தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்னைகளை உடனே தீர்த்து விடுவதாக தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. கட்சி வாக்குறுதி கொடுத்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்களும் பிரச்னையைத் தீர்க்கவில்லை. கச்சத்தீவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார் நல்லகண்ணு.












Click it and Unblock the Notifications