கிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது- பாலகிருஷ்ணன்
கிருஷ்ணகிரியில் விளை நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலம்: கிருஷ்ணகிரியில் விளை நிலங்களில் டிரான்ஸ்பார்மர் அமைக்கக் கூடாது என்று சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சேலத்தில் கூறுகையில், கிருஷ்ணகிரியில் விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க கூடாது.
கையகப்படுத்த கூடாது
விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் உயர் மின் அழுத்த கோபுரம் அமைப்பது சரியல்ல. விவசாயிகளின் ஒப்புதலை பெற்ற பிறகே சென்னை- சேலம் சாலை அமைக்கப்பட வேண்டும். விவசாயிகளை மிரட்டி நிலம் கையகப்படுத்தக் கூடாது.
70 பேர் துப்பாக்கிச் சூடு
நிலம் தராத விவசாயிகளை இரவில் போலீஸார் கைது செய்கின்றனர். திட்டங்களுக்காக மக்களை துரத்தக் கூடாது. தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 பேரை துப்பாக்கியால் சுட்டது ஏன்.
அதிமுக ஆட்சி நீடிக்க...
முதல்வர் அனுமதி இல்லாமல் 70 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் இருக்கிறதா. அதிமுக ஆட்சி நீடிக்க நீதிமன்றம் துணையா?
5 மடங்கு அதிகரிப்பு
18 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறை 5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார் பாலகிருஷ்ணன்.