தலித் சிறுமியை பள்ளியில் சேர்க்க தாயாரை வேலை வாங்கினாரா தலைமை ஆசிரியை?
மதுரை: தனது மகளைப் பள்ளியில் சேர்க்க வந்த ஒரு தலித் பெண்ணை தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்ய வைத்தார் என்று ஒரு தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்துள்ளது.
ஆனால் தனக்கு வேலை தருமாறு சம்பந்தப்பட்ட பெண் முத்துப் பிள்ளை கேட்டதால்தான் தண்ணீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் சொல்லிச் சொன்னோம். இதற்காக அவருக்கு ரூ. 250 கூலியும் தரப்பட்டதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி விளக்கியுள்ளார்.
ஆனால் தனது தாயாரை கட்டாயப்படுத்தி இதைச் செய்ய வைத்ததாக சம்பந்தப்பட்ட பெண்ணா முத்துப்பிள்ளையின் மகள் கூறியுள்ளார்.

மகளைச் சேர்க்க வந்த முத்துப்பிள்ளை
முத்துப்பிள்ளையின் மகள் பத்தாவது வகுப்பை மேலூர் அல் அமீன் பள்ளியில் படித்தார். அங்கு அவர் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேறினார். பிளஸ் ஒன் படிப்புக்காக அரசு மேல் நிலைப்பள்ளிக்கு வந்துள்ளார்.

மாலை 4 மணிக்கு
சம்பவத்தன்று அதாவது ஜூலை 28ம் தேதி பள்ளியில் குரூப் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடந்தது. அப்போது தலைமை ஆசிரியை மைதானத்தில் இருந்துள்ளார். தண்ணீர்த் தொட்டியைப் பார்த்த அவர் அது அசுத்தமாக இருந்ததை அறிந்து உடனடியாக முத்துப்பிள்ளையை அழைக்குமாறு ஒரு ஆசிரியையிடம் கூறியுள்ளார்.

போன் போட்டு வரவழைப்பு
அட்மிஷனுக்காக வந்து சென்றிருந்த முத்துப்பிள்ளையை அவரது செல்போனில் அழைத்த ஆசிரியை, உடனடியாக வருமாறு கூறியுள்ளார்.

2 மணி நேரம்
முத்துப்பிள்ளையும் வந்துள்ளார். அவரிடம் தொட்டியைச் சுத்தம் செய்யுமாறு தலைமை ஆசிரியை பணித்துள்ளார். முத்துப்பிள்ளையும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்துள்ளார்.

பள்ளிக்கூடத்தில் கோஷ்டி பூசல்....
இந்த விவகாரம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயசாமி கூறுகையில், நான் இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் பேசினேன். அந்தப் பெண் தான் தனது மகளை பள்ளியில் சேர்க்க வந்தபோது வேலை இருந்தால் கொடுங்கள் என்று கேட்டதாகவும் இதனால்தான் வேலை செய்யச் சொன்னேன் என்றும் விளக்கினார். இதுபோல இனிமேல் செய்ய வேண்டாம் என்று அவருக்கு நான் அறிவுரை கூறியுள்ளேன். மேலும் அந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கிடையே கோஷ்டிப் பூசல் உள்ளது. அதுதொடர்பாகவும் நான் விசாரித்து வருகிறேன் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications