கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு.. அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறினார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சாராய மரணங்கள் மொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்த தமிழக அரசு, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் விசாரணை ஆணையம் ஒன்றையும் அமைத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் சிபிஐ விசாரணையும் கோரி வருகின்றன.
தமிழக பாஜக சார்பிலும், அதிமுக சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. மேலும் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைவர் அண்ணாமலையும் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து சிபிஐ விசாரணை கோரி மனுவும் அளித்துள்ளன. இந்த நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடந்துள்ளது என்றும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
தமிழக ஆளுநர் மாளிகையில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 பேர் பலியாகியுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை குறித்து தன்னிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் அளிக்கின்றனர். போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது?.. தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த ஆர். என். ரவி, "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியான தகவலை கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணம் அடையவும் வேண்டிக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்" என்று கூறியிருந்தார்.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications