ஜெ.தீபா வீட்டுக்கு வந்த போலி அதிகாரி மீது மாதவன் புகார்
ஜெ. தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை நடத்த வந்த போலி அதிகாரியை கைது செய்ய கோரி மாதவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெ.தீபா வீட்டுக்கு வருமான வரி சோதனை நடத்த வந்த போலி அதிகாரியை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாதவன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தி.நகர் சிவஞானம் சாலையில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அவரது வீட்டுக்கு ஒருவர் வந்தார். அவர் தனது பெயர் மித்தேஷ் குமார் என்றும் வருமான வரித்துறை அதிகாரி என்றும் மாதவனிடம் தெரிவித்துள்ளார். தனது அடையாள சான்றிதழையும் காண்பித்துள்ளார்.

அப்போது தீபா வீட்டில் இல்லை. 10 மணிக்கு மேலும் 10 அதிகாரிகள் வந்தவுடன் சோதனை நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தீபாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த அந்த நபர் திடீரென ஓட்டம் பிடித்தார். அவரை போலீஸாரும் துரத்தி கொண்டு ஓடினர். எனினும் அவர் சிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து வீட்டில் சோதனையிட முயன்ற நபர் குறித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் தீபாவின் கணவர் மாதவன் புகார் அளித்துள்ளார். போலி அதிகாரி கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் மனு அளித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications