நெல்லையில் மிரட்டும் டெங்கு காய்ச்சல் – ஒருவர் பலி 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நெல்லை: டெங்கு காய்ச்சலால் நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார். பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடும் சுகாதார சீர்கேடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் பலர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அங்கு தொடங்கிய காய்ச்சல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவியதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று திரும்பினர்.
அரசு கடும் நடவடிக்கை எடுத்ததால் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் அரசு மருத்துவமனையிலும், முக்கிய இடங்களிலும் இலவசமாக வழங்கப்பட்டதால் டெங்கு காய்ச்சல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் தற்போது கோடை தொடங்கியுள்ளதால் நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே கலிங்கப்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனைகளிலும், அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். ஆனால் காய்ச்சல் குறையாததால் டெங்கு இருக்குமோ என்ற அச்சத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் இதுவரை சுகாதார துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் பீதி காரணமாக கலிங்கப்பட்டிக்கு யாரும் வராததால் அந்த கிராம மக்கள் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்க வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
சுகாதார துறையினர் உடனே துரித நடவடிக்கை எடுத்து மேலும் டெங்கு பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications