For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசியில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

By Karthikeyan
Google Oneindia Tamil News

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவி உயிரிழந்தார்.

சிவகாசியில் உள்ள சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் குமார். அவரது மகள் மதுஸ்ரீ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Dengue fever school student killed in Sivakasi

நேற்று முன் தினம் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறுமி மதுஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல மாதங்களாக ஊராட்சி குப்பை அகற்றப்படாமலும், கழிவு நீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததாலும் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, சுகாதாரத்துறையினர் சிவகாமிபுரத்தில் முகாமிட்டு, வீடு வீடாக சென்று அபேட் மருந்துகளை ஊற்றி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

English summary
Dengue fever school student killed in Sivakasi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X