யார் போனாலும் தேமுதிகவுக்கு ஒன்றும் ஆகாது - கொ.ப.செ

Subscribe to Oneindia Tamil

Desertions will not affect party, says DMDK
ஈரோடு: தேமுதிகவை விட்டு வெளியேறும் அனைவருமே சுய லாபத்துக்காகத்தான் போகிறார்கள். எனவே இப்படிப்பட்டவர்களால் கட்சிக்கு எதுவும் நடக்காது என்று தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் கூறியுள்ளார்.

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூபாய் 3 கோடியே 25 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், பாலங்கள், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் ரூபாய் 75 லட்சம் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேமுதிகவில் இருந்து வெளியேறும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருக்கும் வரை கட்சி தலைமை மீது எவ்வித அதிருப்தியும் தெரிவிப்பது இல்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக கட்சியை விட்டு வெளியேறிய பிறகுதான் அதிருப்தி இருப்பதாக கூறுகின்றனர்.

உண்மையிலேயே அவர்கள் சுயலாபத்திற்காகவும், ஆதாயங்களுக்காகவும்தான் வெளியேறி வருகின்றனர். ஆதாயத்திற்காக வெளியேறுபவர்களால் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார் சந்திரகுமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+