தேர்தல் பிரிவு டி.ஜி.பி. மகேந்திரன் போலீஸ் பயிற்சி அகடாமிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் பணிகளுக்காக டி.ஜி.பி.-யாக நியமிக்கப்பட்டிருந்த கே.பி.மகேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று பிறப்பித்தார்.
தேர்தல் பிரிவு டி.ஜி.பி.,யான கே.பி.மகேந்திரன், காவலர் பயிற்சி டி.ஜி.பி.-யாக நியமனம் செய்யப்படுகிறார். அவர் ஏற்கெனவே வகித்து வந்த தேர்தல் பணி டி.ஜி.பி. பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அபூர்வ வர்மா தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை ஒட்டி, அந்தப் பணிகளை கவனிப்பதற்காக மட்டுமே தேர்தல் ஆணையத்தால் கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார்.
தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications