பெட்ரோல், டீசலுக்காக நீண்ட கியூவில் காத்திருந்த வாகன ஓட்டிகள்.. சென்னையில் டிராபிக் ஜாம்
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை நகரத்தில் தற்போது வெள்ளம் வடிய தொடங்கியுள்ளதால், வீட்டை விட்டு வெளியே வந்த மக்கள், பெட்ரோல், டீசலுக்காக அலைபாய்கிறார்கள். இப்படி கூட்டம் சேர்ந்ததால் கோடம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு பெட்ரோல் பங்கில் இன்று காலை முதல் வாகன கூட்டம் கூடிக்கொண்டே சென்றது. வாகன கியூ சாலை வரை நீண்டதால், சாலையில் வாகன போக்குவரத்தே தடைபட்டது.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், பெட்ரோலுக்காக காத்திருந்த வாகன ஓட்டிகளும் சண்டை போட்டுக்கொண்டதை பார்க்க முடிந்தது.

பெட்ரோல், டீசல் பற்றாக்குறையை நினைத்து அச்சப்படாமல் பொறுமையுடன் நிலைமையை கையாளுமாறு பெட்ரோல் நிறுவனங்கள் மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளன. வெள்ளம் வடியத் தொடங்கியதும், படிப்படியாக பெட்ரோல் பங்குகள் திறக்கப்படும் என்று ஆயில் நிறுவனங்கள் தரப்பு கூறுகிறது.












Click it and Unblock the Notifications