ஜெயலலிதாவை குறை சொல்கிறாரா டிடிவி தினகரன்? ஜெயக்குமார் பாய்ச்சல்
ஜெயலலிதாவின் அமைச்சரவை திறமையற்றது என்றால் ஜெயலலிதாவை டிடிவி தினகரன் குறை சொல்கிறாரா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் அமைச்சரவை திறமையற்றது என்றால் ஜெயலலிதாவை டிடிவி தினகரன் குறை சொல்கிறாரா என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் தரப்புக்கும் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியினருக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. இரு தரப்பினரும் மாறி மாறி வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் சி.பா.ஆதித்தகாரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை வளாகம் முன்பு பேட்டி கொடுத்த அனைவரும் விசாரிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
தினகரன் தன்னிடம் உள்ள ஆதாரங்களை விசாரணை கமிஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஜெயலலிதா அமைச்சரவை திறமையற்றது என்றால், ஜெயலலிதாவை தினகரன் குறை சொல்கிறாரா? என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மரணத்தின்போது இருந்த அனைவருமே விசாரணைக்கு உள்ளாக்கப்படுவர் என்றார். ஆதாரங்கள் அனைத்தையும் விசாரணை ஆணையத்திடம் அளித்த பிறகே உண்மை வெளிவரும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications