நள்ளிரவில் வேட்டி, சேலை விநியோகம் செய்த அதிமுகவினர்- கைகலப்பில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள்
திண்டுக்கல்: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி திண்டுக்கல் அருகே மக்களுக்கு இரவில் வேட்டி-சேலை விநியோகம் செய்த அதிமுகவினரை மற்ற கட்சியினர் தட்டிக் கேட்டதால் பெரும் மோதல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே சீவல்சரகு ஊராட்சி ஆதிலட்சுமி புரத்தில் நேற்று இரவு அ.தி.மு.கவினர் வேஷ்டி-சேலை, ஜெயலலிதா படம் பொறித்த பனியன், துண்டு, ஆகியவற்றை வீட வீடாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது சித்தையன் கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் காரில் வந்து கொண்டிருந்தார். இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியான கார் நிற்பதைப்பார்த்து அங்கு வந்தார்.

சீவல் சரகு அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனுக்கு சொந்தமான காரில் வைத்து வேட்டி- சேலை வழங்கப்பட்டது தெரியவந்தது. உடனே அவர்களை தடுத்து நிறுத்திய தி.மு.கவினர் இது குறித்து செம்பட்டி போலீசாருக்கும் பறக்கும் படை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வர தாமதம் ஆனது. இதனால் ஆத்தூர் பிரிவில் செந்தில்குமார் தலைமையில் தி.மு.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், வேட்டி-சேலை வழங்கிய அதிமுகவினருடன் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உண்டாது. அதன் பிறகு அங்கு வந்த போலீசார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக 2 பண்டல்களில் வைத்திருந்த வேட்டி-சேலைகளையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து சீவல்சரகு அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராஜா மற்றும் தி.மு.க. சார்பில் தனித்தனி புகார்கள் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் தி.மு.க அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு வரை நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications