ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் - திண்டுக்கல் சீனிவாசன் பரபர குற்றச்சாட்டு
ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
மதுரை: ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலை செய்கிறார் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழா கூட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஆர்பி உதயக்குமார், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார். அவர் பேசியதாவது, காவிரி நீரை பெற்று தந்த அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.
விவசாயிகளுக்கு காவிரி நீர் பெற்றுத்தந்த ஆட்சி போக வேண்டுமா?ஆட்சியை கலைக்க ஸ்டாலின் மஸ்தான் வேலையை செய்கிறார்; ஆனால் அவரால் முடியவில்லை.
முதல்வர், துணை முதல்வருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்ததில்லை. இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.