Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரசியலில் ஊழல் புரையோடி வருகிறது.. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாலே ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் ஏற்கெனவே பதவியில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 2011-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இதற்கான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது அரசியலில் ஊழலும் முறைகேடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக தீபக் மிஸ்ரா வருத்தம் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பில் ஊழல் குறித்து இவர் அளித்த கருத்து 100 சதவீதம் உண்மை ஆகும். மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், வார்டு கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் பாரபட்சம் இல்லாமல் ஊழல் கொடி கட்டி பறக்கிறது.

[முதல்ல நீங்க நிறுத்துங்க.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு!]

என்னென்ன ஊழல்

என்னென்ன ஊழல்

தமிழகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் முதல்வர் மீது சொத்து குவிப்பு வழக்கையும் அமைச்சர் மீது குட்கா ஊழல் வழக்கையும் திமுக முன்வைத்துள்ளது. இதுபோல் மாநிலத்துக்கு மாநிலம் மாட்டு தீவன ஊழல், சோலார் தகடுகள் வாங்கியதில் ஊழல், ரபேல் விமான ஊழல், அகஸ்டா வெஸ்ட்லாந்த் விமான கொள்முதல் ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கு, வஃக்பு வாரிய நில விவகாரத்தில் ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் நில ஒதுக்கீட்டில் ஊழல், காமன்வெல்த் கேம்ஸில் ஊழல், சத்யம் ஊழல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

இந்த ஊழலில் பெரும்பாலான மாநில அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் கூட சிவக்குமார் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்தில்லாத புற்றுநோய் போல் ஊழலானது அங்கும் இங்கும் பரவித்தான் வருகிறது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் முதல் உயர் அதிகாரி வரை தற்போது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி ஊழல் புகார் இருந்தால் சஸ்பெண்ட், வழக்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதை போல் அரசியல்வாதிகள் மீதும் எடுக்கப்பட வேண்டும். பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் காலம் கடந்து வழங்கப்படும் நீதிகளாலும் மற்றவர்களுக்கு பயம் என்பது இல்லாமல் போய்விடுகிறது.

வழக்குகள்

வழக்குகள்

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே அரசியலில் இருக்கின்றன. ஒரு அரசியல்வாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டு, அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு ஆதாரங்களை சமர்பித்து வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்படுவதற்குள் அந்த அரசியல்வாதியின் ஆயுளே முடிந்து விடுகிறது. எனவே இதபோன்ற தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளின் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

அரசு அதிகாரிகள்

அரசு அதிகாரிகள்

இதற்கெல்லாம் தீர்வு என்றால் லோக் ஆயுக்த சட்டத்தை அனைத்து மாநிலங்களும் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கைகள் பாயும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+