முதல்ல நீங்க நிறுத்துங்க.. அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் கொட்டு!
சென்னை: குற்றப்பின்னணி கொண்டவர்களை அரசியல் கட்சிகளே தேர்தலில் நிறுத்தாமல் இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுவதும் நல்ல யோசனைதானே.
எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.
இதன் தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதில் நீதிபதி தீபக் மிஸ்ரா மிகவும் நிதர்சனமான தீர்ப்பை வழங்கியுள்ளார்.
[குற்ற பின்னணி கொண்ட அரசியல்வாதிகள்... நீதிபதி மிஸ்ரா கொடுத்த சுளீர் தீர்ப்பு!]

மலிந்து விட்டது
அவர் கூறிய தீர்ப்பில் குற்றப்பின்னணி உள்ளவர்களை தேர்தலில் நிறுத்துவதை அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளித்தார். ஊழல் மலிந்து விட்டது ஊழல் மலிந்து விட்டது என்று நாம் கத்தி கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

சுத்தமாக இருக்க வேண்டும்
ஒரு வேட்பாளர் நல்லவரா கெட்டவரா அவர் மீது குற்ற பின்னணி இருக்கிறதா என்பதை அறிந்து அவருக்கு சீட் வழங்க வேண்டும். இதற்கு குறிப்பிட்ட அந்த அரசியல் கட்சியின் தலைமை சுத்தமாக இருக்க வேண்டும்.

தார்மீக தகுதி
தலைமை நியாயமாக சுத்தமானவராக இருந்தால் எந்த ஊழலையும் தட்டி கேட்கவும் குறிப்பிட்டவருக்கு சீட் தராமல் இருக்கவும் அவருக்கு தார்மீக தகுதி உள்ளது. நல்லாட்சியை வழங்குவது என்பது தாமும் தனது சுற்றத்தாரும் கறைப்படியாத கைக்கு சொந்தக்காரர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்.

மக்கள்தான் எஜமானர்கள்
ஊழல்வாதியை கட்சிகள் வேட்பாளராக அறிவித்தாலும் அவர் கொடுக்கும் காசுக்காக வாக்காளர்கள் விலை போக கூடாது. ஊழல் கறை இல்லாதவரை தேர்வு செய்தால் அந்த மாநிலத்துக்கு தானாக தொழிற்சாலைகள், இதர திட்டங்கள் வந்து சேரும். இதனால் மாநிலம் முன்னேற்றம் அடைவதுடன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளும் பெருகும்.

ஊழல்வாதி
எனவே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் பணத்தை காட்டிலும் 5 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நமக்கு கிடைக்கும் தொழில் உள்ளிட்ட இதர வளர்ச்சிகளை வாக்காளர்கள் விரும்ப வேண்டும். அதை விட்டுவிட்டு அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் மட்டுமே குறை கூறுவதை ஏற்க முடியாது. வீட்டின் எஜமானர்கள் வாக்காளர்கள்தான். அவர்கள் விரும்பினால் மட்டுமே நல்லவரோ ஊழல்வாதியோ உள்ளே வர முடியும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications