ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்... பாரதிராஜா வாழ்த்து!
Recommended Video
சென்னை : ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல் என்று இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். கமலின் அரசியல் பயணம் வெற்றி பெறவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா நடிகர் கமல்ஹாசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது : என் இனிய நண்பர் கமல்ஹாசனுக்க பாரதிராஜா எழுதுகிறேன், "அறிவாளியாய் இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறவன் தான் ஜெயிக்கிறான்" என்ற தத்துவம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு இன்று சாதி, மதம், இனம் வேற்றுமைகளால் உடைக்கப்பட்டுக் கிடக்கிறது. இது அத்தனையும் ஒரே அணியில் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.
கரைவேட்டிக்ட்டி கட்சிக் கொடி பிடித்து, மேடை போட்டு, மைக் பிடித்து பேசுவது மட்டும் தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல! திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் பிரச்சாரம் அல்ல!திரைப்படத்தின் மூலமும் சமூக அரசியல் கருத்துகளைச் சொல்லலாம்.
மக்கள் பணியாற்றியவர்
என் திரைப்படங்கள சென்சார் செய்யாமல் திரையிட அனுமதிக்காததால் ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சியமைக்கிறேன் என்றாராம் அறிஞர் அண்ணா.
கமல்ஹாசனும் தன் திரைப்படங்களின் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் விதைத்தவர்தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர் தான். இந்த தானத்தில் இருந்து தன் உடலையே தானம் செய்தவர் கமல்.
தலைவனுக்கான தகுதியுடையவர்
அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இது போன்ற நற்பணிகளை செய்தவரல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தினால் தான் செய்தார் ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.
மாற்றம் கொண்டு வர முடியும்
இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, போராட்டம் ஆகியவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்கள் புரட்சியினால் மட்டும் தான் மாற்றம் கொண்டு வர முடியும்.
பயணம் வெற்றியடையட்டும்.
மக்கள் நீதி மய்யத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான் என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல்! நீங்கள் செய்ய முடிந்தவர். திரையில் தெரிந்த உங்களின் தசாவதாரம், அரசியல் விஸ்வரூபம் பெற வாழ்த்துகிறேன் என்று பாரதிராஜா வாழ்த்தியுள்ளார். நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமையாக விமர்சித்த பாரதிராஜா கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.