கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் அடைத்து வைப்பு- தமிழக அரசுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி கண்டனம்
சென்னை: கூர்நோக்கு இல்லங்களில் அதிக சிறார் இருப்பதே அமைதியான பாதைக்கு அவர்கள் திரும்ப முடியாமல் தவறான பாதைக்குத் திரும்ப காரணம் என்று தமிழக அரசுக்கு இயக்குநர் சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கில் அப்பா திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தியேட்டருக்கு வந்து ரசிகர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சமுத்திரக்கனி கூறியதாவது:
இந்த படம் யாரைப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களைப் போய் சேர்ந்திருக்கிறது. நான் என்ன நினைத்தேனோ அதையும் தாண்டி இந்தப் படம் மக்களிடம் போய் சென்றடைந்துள்ளது.
சினிமா பார்முலாவிலே இல்லாத ஒரு சினிமாவை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறேன். தொடர்ந்து இதுபோன்ற திரைப்படங்களை எடுப்பேன்.
தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு சிறுவர் இல்லங்கள் இல்லத்தில் அதிகளவில் சிறுவர்கள் உள்ளதால் அவர்கள் அமைதியான பாதைக்கு திரும்ப முடியாமல் அதிக தவறுகளை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
எனவே, கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களை திருத்துவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சமுத்திரக்கனி கூறினார்.












Click it and Unblock the Notifications