"காத்திருந்து காத்திருந்து".... வெறிச்சோடிய தேமுதிக அலுவலகம்.. விரக்தியில் தேமுதிகவினர்!
சென்னை: ஒரே நாளில் தரைமட்டமாகி விட்டது தேமுதிகவின் கிராக்கியும், மவுசும். என்றைக்கு, நாங்கள் தனித்துத்தான் போட்டியிடப் போகிறோம் என்று விஜயகாந்த் சொன்னாரோ அன்றே அவரை அப்படியே தூக்கிப் போட்டு விட்டன, அவரைக் கெஞ்சி வந்த கட்சிகள் அனைத்தும்.
தற்போது பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைய வேண்டும். இல்லாவிட்டால் தனித்து நின்று மீண்டும் டெபாசிட்டை இழக்க வேண்டும் என்ற நிலையில்தான் தேமுதிக உள்ளது.
எப்படியும் திமுகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைப்பார், ஜெயித்து எம்.எல்.ஏவாகி விடலாம் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் விருப்ப மனு செய்திருந்த கட்சியினர் இப்போது பெரும் ஏமாற்றமடைந்துள்ளனராம். இதனால் விருப்ப மனு தாக்கல் செய்த போது கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டு வருகிறார்களாம்.

மாறி மாறிக் குழப்பிய விஜயகாந்த் - பிரேமலதா
விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்த்தும் சேர்ந்து கட்சிகளை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் பெருமளவில் குழப்பி விட்டனர். இப்படிக் குழப்பிக் குளிர்காய்ந்து வந்த அவர்களின் நிலை இன்று பெரும் பரிதாபகரமாகியுள்ளது.

அதிமுகவில் கிடைத்த அங்கீகாரம்
தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளை மட்டுமே பிரித்து வந்த தேமுதிகவுக்கு அதிமு கூட்டணியில் 2011ம் ஆண்டில் இடம் பெற்றதன் மூலம் அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அது தனது பலத்தால்தான் வந்தது என்று நினைத்துக் கொண்ட தேமுதிக கடந்த லோக்பசா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு போட்டியிட்ட 14 தொகுதிளிலும் படு தோல்வியைத் தழுவியது.

பாமக - பாஜக அளவுக்குக் கூட இல்லை
ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக, பாமக கூட தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தன. ஆனால் தேமுதிகவுக்கு செம அடி கிடைத்தது அந்தத் தேர்தலில்.

இருந்தாலும் போகாத கிராக்கி
இருந்தாலும் தேமுதிகவின் கிராக்கி மட்டும் போகவில்லை. இந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை கடுமையாக முயன்றனர். பேரம் படு சூடாக நடந்து வந்தது.

கட்சியினர் உற்சாகம்
இப்படி தங்களது கட்சிக்கு ஏற்பட்ட இந்த. கிராக்கியால் குஷியடைந்த தேமுதிகவினர் எப்படியும் வலுவான கூட்டணி அமையும், நாமும் எம்.எல்.ஏ ஆகி விடலாம் என்ற நம்பிக்கையில், விருப்ப மனுக்களைக் குவித்துத் தள்ளி விட்டனர்.

எல்லாம் போச்சு
ஆனால் எவ்வளவு இறங்கி வந்தும் தேமுதிக இறங்க வராத காரணத்தால் திமுக, பாஜக உள்ளிட்டவை வெறுத்துப் போயிருந்த நிலையில் தேமுதிக தனியாகத்தான் போட்டியிடும் என்று கூறி அத்தனையையும் காலி செய்து விட்டார் விஜயகாந்த்.

வெறிச்சோடிப் போச்சு
விஜயகாந்த் சொன்னதால் திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டபோதிலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டு அவரவர் வேலையைப் பார்க்கப் போய் விட்டனர்.

இன்னும் தொங்கும் பாஜக
அதேசமயம், பாஜக மட்டும்தான் இன்னும் தேமுதிகவை தாங்கிக் கொண்டுள்ளது. தனித்து விடப்படும் நிலையில் அது இருப்பதால் துணைக்கு தேமுதிகவை கூப்பிட்டுக் கொண்டுள்ளது.

வந்தால் சரித்தான் - மக்கள் நலக் கூட்டணி
மறுபக்கம் மக்கள் நலக் கூட்டணி ரொம்பப் பக்குவமாக உள்ளது. எங்களது கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் நிச்சயம் வரவேற்போம் என்று அவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.

டென்ஷனில் தொண்டர்கள்
ஆனால் தேமுதிகவினர்தான் செம டென்ஷனாக உள்ளனர். குறிப்பாக விருப்ப மனு தாக்கல் செய்தோர் இப்போது தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையே விட்டு விட்டதாக சொல்கிறா்கள்.

பணத்தைக் கொடுங்க
விருப்ப மனு தாக்கலின்போது கொடுத்த பணத்தை பலர் திரும்பக் கேட்டு கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வந்தவண்ணம் உள்ளனராம். அவர்களை கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் சமாதானம் செய்ததுடன், தலைவர் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார். அதுவரை பொறுமையாக இருங்கள். யாரும் கட்சி அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

குழப்பத்தில் தேமுதிக
தேமுதிக அலுவலகம் முன்பு போல இல்லை. கூட்டமே இல்லை. வெறிச்சோடிக் காணப்படுகிறது. தொண்டர்களிடம் சுரத்து போய் விட்டது. கட்சி் தலைமையும் வெளிப்படையாக இல்லை என்பதால் தேமுதிக முகாம் பெரும் குழப்பத்தில் உள்ளது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு!












Click it and Unblock the Notifications