விஜயகாந்த்தை நம்பி ஏமாறாமல் தப்பிச்சுட்டோம்ல.. தா.பாண்டியன் பேச்சு

திருப்பூருக்கு வந்த தா.பாண்டியன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் வருகிற மார்ச் மாதம் 8-ந் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விவாதித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் எந்தவித நிலையும் இதுவரை எட்டப்படவில்லை. தொகுதி பங்கீடு குறித்து பேசி வருகிறோம்.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமு.கூட்டணி வெற்றி பெறும். விஜயகாந்துடன் கூட்டணி அமைப்பவர்கள் ஏமாந்து போவார்கள். முன்கூட்டியே ஏமாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கோடைகாலம் தொடங்கி விட்டதால் மின்தட்டுப்பாடு இல்லாத நிலையை ஏற்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகளுக்கு மேல் எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. அந்த இரு கட்சிகள், மத்தியில் ஆளும்போது கடைபிடிக்கும் கொள்கைகள் ஒரே மாதிரியானவை. ஆகவே பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
நாட்டுக்கு நல்லதை செய்யும் வகையில் ஒரே கொள்கையையுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கிறோம். பா.ஜ.க தனிநபரை வைத்து தேர்தல் பிரசாரம் செய்கிறது. ஒரு அரசு கடைபிடிக்கும் கொள்கை தான் தேர்தலில் வெற்றியை கொடுக்கும்.
இடதுசாரிகள் கொண்ட மாற்று அணியின் பலம் பெருகி வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் களத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை அதிமுக அணியுடன் சேர்ந்து சந்திக்கிறோம்.
இதுதவிர பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தேவகவுடா ஆகியோரும் இடதுசாரிகளுடன் இணைந்திருக்கிறார்கள். முலாயம் சிங் யாதவ் தேர்தலுக்கு பின் இடதுசாரிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆந்திராவில் 2 கட்சியினர் கூட்டணிக்கு பேசி வருகின்றனர். இதனால் தற்போதைய நிலையில் 14 கட்சிகள் இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்திருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம்.
இடதுசாரிகள் கொண்ட மாற்று அணி நாடாளுமன்ற தேர்தலில் 500 தொகுதிகளில் போட்டியிடும். மத்தியில் மாற்று அணி ஆட்சி அமைக்கும். இந்த அணியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது. அதற்கேற்ப மக்கள் தீர்ப்பு அமையும் என்றார் தா.பாண்டியன்.
-
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications