மதுக்கடைகளை மூடக்கோரி ஆகஸ்ட் 4ல் பந்த்: தேமுதிக, காங்கிரஸ் ஆதரவு- பாமக, தமாகா பங்கேற்காது
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. மற்றும் த.மா.கா. பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது, காந்தியவாதி சசிபெருமாள் மரணம் அடைந்ததையடுத்து, தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி நாளை (ஆகஸ்ட்4) முழு அடைப்பு போராட்டத்திற்கு, ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க., த.மா.கா. பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமக பங்கேற்காது
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 4ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது எனக் கூறினார்.

தமாகா ஆதரவில்லை
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், ''பூரண மதுவிலக்கு பற்றிய கொள்கை, உணர்வை த.மா.கா. மதிக்கின்றது. இருப்பினும், மக்கள், வர்த்தகர்கள் நலன் கருதி கடையடைப்பு போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்காது.'' எனக் கூறியுள்ளார்.

விஜயகாந்த் ஆதரவு
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக ஆதரவு அளித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்தவும் வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆதரவு
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சசிபெருமாளின் மரணத்தை கொச்சைப்படுத்தும்விதமாக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாகும். இந்நிலையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 4-ம் தேதி ( நாளை) நடக்கவுள்ள முழு அடைப்புக்கு தமிழக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications