தேமுதிகவிலிருந்து 'விஆர்எஸ்' வாங்கிய மா.செ... பெர்மிஷன் கொடுத்து அனுப்பி வைத்த விஜயகாந்த்!
சென்னை: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.எஸ்.மணிகண்டன் குடும்பச் சூழல் காரணமாக பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்து கட்சித் தலைவர் விஜயகாந்த்துக்குக் கடிதம் அனுப்பினார். அதைப் பரிசீலித்த விஜயகாந்த், அவருக்குப் பதில் புதிய நிர்வாகியை நியமித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை: தேமுதிக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.மணிகண்டன் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவிக்க கேட்டுக்கொண்டதால் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்களாக வி.எம்.நேரு, குமரன் (மாவட்ட துணை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக தேமுதிகவிலிருந்து பல மாவட்டச் செயலாளர்கள் விலகி திமுக, அதிமுக என மாறி மாறி ஓடிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications