கிட்டப்பா அங்காடி அருகே உண்ணாவிரதம் இருக்க வந்த தேமுதிக எம்.எல்.ஏ. கைது!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை: மயிலாடுதுறை சட்டமன்ற தே.மு.தி.க உறுப்பினர் பால.அருட்செல்வன், தொகுதி கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், மயிலாடுதுறைக்குப் புதிய பேருந்து நிலையம் கொண்டு வர வேண்டும், வெளிவட்ட சாலை அமைக்கப்பட வேண்டும்.

சீர்காழி தாலுகா கொள்ளிடத்தைத் தனித் தாலுகாவாக உருவாக்கி கொடுக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தனது ஆதரவாளர்களோடு முடிவு செய்தார் எம்.எல்.ஏ பால.அருட்செல்வன்.
இதனையடுத்து அவர் தன்னுடைய சகாக்களுடன் கிட்டப்பா அங்காடி அருகே உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications