திருப்பூரை கொ.ம.தே.க.வுக்கு கொடுத்ததற்கு தேமுதிக கடும் எதிர்ப்பு- தொண்டர் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர்: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு திருப்பூர் தொகுதியைக் கொடுத்ததற்கு தேமுதிகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இன்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே சேலம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதற்காக பாமகவினர் அங்கு போராட்டத்தில் குதித்தும், தீக்குளிப்பு முயற்சியிலும் ஈடுபட்ட நிலையில் இன்று திருப்பூரில் தேமுதிகவினர் கொங்குநாடு கட்சிக்கு எதிராக தீக்குளிப்பில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தே.மு.தி.க. வடக்கு மாவட்ட அலுவலகம் முன்பு கூடிய மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் மற்றும் தொண்டர்கள், அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தொகுதி கொ.ம.தே.க.விற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சி நிர்வாகிகள், திருப்பூர் தொகுதியை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, தே.மு.தி.க.வை சேர்ந்த லட்சுமணன் என்ற தொண்டர், தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கட்சி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
இதையடுத்து தே.மு.தி.க. நிர்வாகிகளின் அவசர கூட்டம் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் சந்திரசேகர், பொருளாளர் தங்கவேல், துணைச் செயலாளர் கோவிந்த்ராஜ், செந்தில், குழந்தை வேல் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக செயலாளர்கள் என நிர்வாகிகள் 60 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications