அமைச்சர் வரும்போதுதான் ப்ளீச்சிங் பவுடர் அடிக்கிறாங்க.. பிரேமலதா பாய்ச்சல்
திருவள்ளூர்: மர்மகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையே சுத்தமாக இல்லை. பல நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 24 பேர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை இன்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.
இதன் பின்னர் பிரேமலதா செய்தியார்களிடம் கூறியதாவது: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனையே சுத்தமாக இல்லை. பல நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கப்படவில்லை.
பல்வேறு கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டும் பிளிச்சிங் பவுடர் தெளிப்பது, நோயாளிகளுக்கு கொசுவலை கொடுப்பது போன்ற செயல்கள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர்கள் செய்வது வெறும் கண்துடைப்பு நாடகமே.
மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் தான் நோய் பரவுவதை கட்டுப்படுத்த இயலும். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் இதனை மறக்காமல் ஆளும் அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி வைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார்.
ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications