சென்னையை போலவே 3 மாவட்டங்களில் மாதிரி சட்டசபை.. அதிரடி காட்டும் திமுக!
சென்னையை போலவே மற்ற மூன்று மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபையை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையை போலவே மற்ற மூன்று மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபையை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபைக்கு வரப் போவதில்லை என அறிவித்து நேற்று முன்தினம் திமுக வெளிநடப்பு செய்தது. இதைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் மாதிரி சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

திமுக எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவு எம்எல்ஏ. கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 3 மாவட்டங்களில் மாதிரி சட்டசபை நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக கொறடா சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் திமுக மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 5 நெல்லையிலும், ஜூன் 8 திருச்சியிலும், ஜூன் 12 சேலத்திலும் மாதிரி சட்டசபை நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரி சட்டசபை கூட்டங்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications