டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்குத் தடை: தலைமை உத்தரவினால் உ.பிக்கள் தவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விவாதம் நடத்தப்படுவதால், முன்னணி நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது' என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது திமுக தலைமை.
இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்துள்ள நிர்வாகிகள் நமது தரப்பு நியாயத்தை எப்படி தெரிவிப்பது என்று கேட்டு வருகின்றனர்.

புதிய தலைமுறையின் நேர்பட பேசு, தந்தி டிவியின் ஆயுத எழுத்து என பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் தி.மு.கவின் வழக்கறிஞர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் தினம்தோறும் பங்கெடுத்து கட்சி மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராக, கொந்தளிப்பார்கள்.
சில நேரங்களில் விவாதங்களில் அனல் பறக்கும், கார சார விவாதங்களில் கை கலப்புகள் வரை கூட சென்றுள்ளது. சிறப்பு விருந்தினராக வந்தவர்கள் மைக்கை கழற்றி போட்டு விட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் கூட நிகழ்ந்துள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், கூட விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கடமையாற்றி வந்தனர். இந்நிலையில், டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வெளியிட்டுள்ள அறிக்கையில், விவாதங்களுக்கு நம்மை அழைக்கிறார்கள். அங்கு யார் பேசினாலும், நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் நம் மீதே அவதூறு செய்கிறார்கள். தி.மு.கவை குற்றம் சொல்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை எல்லாம் நேற்று நடந்தது போல பேசுகிறார்கள். இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் வருகிறது. நாம் செல்வதால் மட்டும்தான், தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது. இனி கழகத்தின் சார்பில் விவாதங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது' என கூறியுள்ளார்.
விவாதங்களில் தி.மு.க சார்பில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால், எங்கள் மீதான களங்கத்தை எப்படித் துடைக்க முடியும்? என்று கேட்கின்றனர் திமுக நிர்வாகிகள். தொலைக்காட்சி விவாதங்களில் பேசினால்தான், மக்கள் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒரேயடியாக, விவாதங்களுக்கு தடை போடுவது சரியா?" எனக் கொந்தளிக்கின்றனர் உடன் பிறப்புகள்.
திமுகவினர் பங்கேற்காத டிவி விவாத நிகழ்ச்சிகள் எல்லாம் கார சாரம் இல்லாத பத்திய சாப்பாடு போல அல்லவா இருக்கும்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications