டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுகவினருக்குத் தடை: தலைமை உத்தரவினால் உ.பிக்கள் தவிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணங்களைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விவாதம் நடத்தப்படுவதால், முன்னணி நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது' என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது திமுக தலைமை.
இந்த உத்தரவினால் அதிர்ச்சியடைந்துள்ள நிர்வாகிகள் நமது தரப்பு நியாயத்தை எப்படி தெரிவிப்பது என்று கேட்டு வருகின்றனர்.

புதிய தலைமுறையின் நேர்பட பேசு, தந்தி டிவியின் ஆயுத எழுத்து என பல தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் தி.மு.கவின் வழக்கறிஞர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் தினம்தோறும் பங்கெடுத்து கட்சி மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராக, கொந்தளிப்பார்கள்.
சில நேரங்களில் விவாதங்களில் அனல் பறக்கும், கார சார விவாதங்களில் கை கலப்புகள் வரை கூட சென்றுள்ளது. சிறப்பு விருந்தினராக வந்தவர்கள் மைக்கை கழற்றி போட்டு விட்டு பாதியிலேயே வெளியேறிய சம்பவங்களும் கூட நிகழ்ந்துள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சி சார்பில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட பலருக்கு வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், கூட விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து கடமையாற்றி வந்தனர். இந்நிலையில், டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க திமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வெளியிட்டுள்ள அறிக்கையில், விவாதங்களுக்கு நம்மை அழைக்கிறார்கள். அங்கு யார் பேசினாலும், நிகழ்ச்சியை நடத்துகிறவர்கள் நம் மீதே அவதூறு செய்கிறார்கள். தி.மு.கவை குற்றம் சொல்வதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை எல்லாம் நேற்று நடந்தது போல பேசுகிறார்கள். இதனால் கட்சிக்குக் கெட்ட பெயர் வருகிறது. நாம் செல்வதால் மட்டும்தான், தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறுகிறது. இனி கழகத்தின் சார்பில் விவாதங்களில் யாரும் பங்கெடுக்கக் கூடாது' என கூறியுள்ளார்.
விவாதங்களில் தி.மு.க சார்பில் பிரதிநிதிகள் இல்லாவிட்டால், எங்கள் மீதான களங்கத்தை எப்படித் துடைக்க முடியும்? என்று கேட்கின்றனர் திமுக நிர்வாகிகள். தொலைக்காட்சி விவாதங்களில் பேசினால்தான், மக்கள் நம்மீது நம்பிக்கை வைப்பார்கள். ஒரேயடியாக, விவாதங்களுக்கு தடை போடுவது சரியா?" எனக் கொந்தளிக்கின்றனர் உடன் பிறப்புகள்.
திமுகவினர் பங்கேற்காத டிவி விவாத நிகழ்ச்சிகள் எல்லாம் கார சாரம் இல்லாத பத்திய சாப்பாடு போல அல்லவா இருக்கும்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications