கருணாநிதி மறைவால் வாடுகிறேன்.. துக்கம் தாங்கலை.. எழுதி வைத்து விட்டு தொண்டர் தற்கொலை
கோவையில் திமுக தொண்டர் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை: கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதிவைத்து விட்டு தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திமுக தலைவரை நேசிப்பவர்கள் பலர். அதனால்தான் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நாளிலிருந்து தற்போது வரை ஏராளமானோர் உயிரை பலி கொடுத்துள்ளனர். கருணாநிதி குறித்த செய்திகளால், அதிர்ச்சி மரணம், மாரடைப்பு, தற்கொலை, என பலவிதங்களில் இந்த தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதுகூட கோவையில் ஒரு திமுக தொண்டர் உயிரிழந்துள்ளார். கணபதி பாரதி நகரை சேர்ந்த இந்ததொண்டர் பெயர் முத்துசாமி. 58 வயதான முத்துசாமி தனியார் நிறுவனம் ஒன்றில் டிரைவராக இருந்தார். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற முத்துசாமி, இரவு வீட்டுக்கு திரும்பி வரவேயில்லை.
இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் முத்துசாமியை தேட ஆரம்பித்தனர். கடைசியில் பாரதி நகரிலேயே சாலை ஓரம் ஒன்றில் விழுந்து கிடப்பதாக சிலர் பார்த்துவிட்டு சொன்னார்கள். இதையடுத்து அங்கு உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்தால், முத்துசாமி விஷத்தை குடித்துவிட்டு விழுந்துள்ளது தெரியவந்தது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சிகிச்சை அளித்தும் முத்துசாமி இறந்துவிட்டார்.
இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் விசாரணையை துவக்கினர். அப்போது அவரது சட்டையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், "தனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. கருணாநிதி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதி வைத்திருந்தார் முத்துசாமி.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications