மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை, திருநங்கைகளுக்கு வாரியம் கண்ட கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி துறையையும் 3ம் பாலினத்தவர்களுக்கு தனி வாரியத்தையும் தனது காலகட்டத்தில் தொடங்கியவர்.
சென்னை: விமர்சனங்கள் பல இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களுக்கும் அடிக்கோடிட்ட அரசியல்வாதி என்று கருணாநிதியை சொல்வதற்கு காரணமாக அமைந்தது மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தனித்துறை மற்றும் திருநங்கைகளுக்கான தனி வாரியம்.
மனித சமுதாயத்தில், காது கேளாதவராய், கண் தெரியாதவராய், வாய்பேச முடியாதவர்களாய், கை கால்களைப் பயன்படுத்த இயலாதவர்களாய், மன நோயாளிகளாய் உள்ள அனைவரையுமே "ஊனமுற்றோர்" என்பதற்குப் பதிலாக, "மாற்றுத் திறனாளிகள்" என்று அழைக்கின்ற முறை குறித்து 2007-ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் அவையில் விவாதிக்கப்பட்டது.
அந்த விவாதத்தின் அடிப்படையில் தமிழகத்தில் "ஊனமுற்றோர்" என்ற சொல் ஒழிக்கப்பட்டது. அன்று முதல் உடல் ஊனமுற்றவர்கள் இனி, "மாற்றுத் திறனாளிகள்" என அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் துறை
இதனைத் தொடர்ந்து 19.3.2010 அன்று தி.மு.க கழக ஆட்சியில், 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும் "மாற்றுத் திறனாளிகளுக்கான தனித் துறை " அறிவிக்கப்பட்டு அன்றே அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், துறையின் பெயரும், அலுவலகம் மற்றும் அலுவலர்கள் பெயர்களும் மாற்றி அமைக்கப்பட்டன.

உதவித்தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு முறையும் கடைபிடிக்கப்பட்டது. மேலும் மாற்றுத் திறனாளியை இன்னொரு மாற்றுத் திறனாளியை திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டத்தையும் கருணாநிதி தலைமையிலான அரசு 2009-2010ஆம் ஆண்டு அறிவித்தது.

நலவாரியம்
இதே போன்று 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், ‘அனைத்துச் சமுதாயத்தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள அரவாணிகளின் நலன்களைப் பாதுகாக்கத்தக்க வகையில், அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்வோம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

திருநங்கைகளுக்கு உரிமை
இதன் அடிப்படையில் தி.மு.க. ஆட்சியில் 15-4-2008 அன்று ‘தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்' தொடங்கப்பட்டு, அரவாணிகள் கணக்கெடுக்கப்பட்டு, அடையாள அட்டை, குடும்ப அட்டைகளும், தொகுப்பு வீடு மற்றும் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மேலும் அரவாணிகள் என்ற அழைக்கப்பட்டவர்களுக்கு திருநங்கைகள் என்று அழைக்கும் முறையையும் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications