For Daily Alerts
Just In
ஆக. 14ல் திமுக செயற்குழு.. கருணாநிதி மறைவுக்குப் பின் முதல் கூட்டம்!
Recommended Video
கருணாநிதி மறைவுக்குப் பின் திமுக-வின் முதல் கூட்டம்!- வீடியோ
சென்னை: திமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இந்த நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி கூட்டப்பட்டுள்ளது.
திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கருணாநிதி மறைவுக்கு இக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
DMK has convened its EC meeting on Aug 14 . This is the first meeting after the demise of Karunanidhi.
Story first published: Friday, August 10, 2018, 13:00 [IST]