மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு இல்லை என அறிவிக்க வேண்டும்- திமுக கோரிக்கை
21-5-2016 அன்று விடுத்த அறிக்கையிலே கூட மத்திய அரசு, மாணவர்களின் இந்தப் பிரச்சினையை விளையாட்டாகக் கருதாமல், தெளிவாகவும், உறுதியாகவும் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டில் மட்டு மல்லாமல், இனி எப்போதும் இல்லை என்ற நல்ல அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று வலியுறுத்தியிருக்கிறார்.

கடைசியாகக் கிடைத்துள்ள தகவல்படி மத்திய அரசு அவசரச் சட்டத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது என்றும், இந்தச் சட்டம் குறித்து குடியரசுத் தலைவர் சுகாதாரத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், சட்ட நிபுணர் களுடனும் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் குடியரசுத் தலைவரும், மத்திய அரசும் இனியும் தயக்கம் காட்டாமல், நுழைவுத் தேர்வுக்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்ப்பினையும், கிராமப்புற மாணவர்களுக்கும் - நகர்ப்புற மாணவர் களுக்குமிடையே உள்ள வேறுபாட்டையும், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மற்றும் ஏனைய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர் களுக்கிடையே உள்ள சமன்பாடற்ற தன்மையினையும் மனதிலே கொண்டு,நுழைவுத் தேர்வு என்பதே இனி இல்லை என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டுமென்று தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.












Click it and Unblock the Notifications