For Quick Alerts
For Daily Alerts
Just In
நீட் எதிர்ப்பு: திருச்சியில் இன்று அனைத்து கட்சி பொதுக் கூட்டம்- அடுத்த கட்ட போராட்டம் அறிவிப்பு?
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்து கட்சி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
திருச்சி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் திமுக ஒருங்கிணைத்துள்ள அனைத்து கட்சிப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
அரியலூர் அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து சென்னையில் அனைத்து கட்சி கூட்டத்தை திமுக ஒருங்கிணைத்தது. இந்த கூட்டத்தில் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருச்சியில் இன்று பொதுக்கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று திருச்சியில் நடைபெறும் அனைத்து கட்சி பொதுக்கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், முஸ்லிம் லீக், திராவிடர் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
Comments
English summary
DMK will hold the all party public meeting in trichy against the NEET Exam on today.