கருப்பசாமி பாண்டியன் விவகாரம் - கோஷ்டி மோதல் எதிரொலியா?

தமிழரசி என்ற பெண் கருப்பசாமி பாண்டியன் மீது கொடுத்துள்ள பாலியல் வற்புறுத்தல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக வட்டாரத்தையும் கலவரப்படுத்தியுள்ளது.
அதை விட முக்கியமாக புகார் கூறிய பெண்ணின் தாத்தா, நெல்லை பகுதியில் திமுகவை வளர்த்த முன்னோடிகளில் ஒருவர். எனவே திமுகவினர் மத்தியில் இந்த புகார் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இதுவரை கருப்பசாமி பாண்டியன் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவர் உள்ளார். அவரது செல்போனும் செயல்படவில்லை. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கருப்பசாமி பாண்டியன் தரப்பில் இது கோஷ்டிப் பூசலின் விளைவாக ஏற்பட்டுள்ள சர்ச்சை என்கிறார்கள். கருப்பசாமி பாண்டியனுக்கு பிடிக்காத எதிர்க்கோஷ்டியினர் செய்த சதியே இது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கருப்பசாமி பாண்டியன் தற்போது சென்னை விரைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications