மோடி வரும் ஏப்.12-ல் கருப்பு உடை, வீடுகளில் கருப்பு கொடி: 9 கட்சித் தலைவர்கள் அழைப்பு

சென்னைக்கு வருகை தரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டவுள்ளதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராணுவ தளவாட கண்காட்சிக்கு சென்னைக்கு வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டவுள்ளதாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ராணுவ தளவாட பொருள்கள் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளார்.

DMK and its ally parties are going to show black flags

இவருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட திமுகவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை மோடி அமைக்கவில்லை.

உச்சநீதிமன்றம் தீர்ப்பை கிடப்பில்போட சந்தேகம் எழுப்பிவிட்டு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் மோடியை தட்டிக் கேட்க துணிச்சல் இன்றி அதிமுக அரசு தூங்குகிறது என குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக மக்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பை பிரதமருக்கு உணர்த்த வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+