முழு சுயநினைவில் கருணாநிதி.. 5வது நாளாக தொடரும் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் பிரச்சனை ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது.அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமானது. மருத்துமனையில் தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஜினிகாந்த் ஆகியோர் வந்தனர். இந்தநிலையில் ராகுல் காந்தி கருணாநிதியை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது.
அவருக்கு 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனையில் 5வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.அவருக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications