கடத்தல், கொலை வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி மகள் மதுரையில் கைது

மதுரை சின்ன சொக்கிக்குளத்தை சேர்ந்தவர் ஜமால் முகமது. ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கடந்த 2ம் தேதி கொடைக்கானலுக்கு கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி(39) என்பவரை முதலில் கைது செய்தனர். இதையடுத்து, மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த சங்கர் (26) என்பவர் மேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர் அளித்த தகவலின்பேரில், போலீசார் கொடைக்கானலுக்கு சென்று ஜமால்முகமது உடலை மீட்டனர். பின்பு இந்த கொலை வழக்கு தொடர்பாக பலரை தேடி வந்த நிலையில் விருதுநகர் கோர்ட்டில் முக்கிய குற்றவாளிகளான முகமது சித்திக் (35), மாரிமுத்து (27) ஆகியோர் சரண் அடைந்தனர்.
இதற்கிடையே, கலெக்டர் சுப்ரமணியத்திடம் ஜமால் முகமது உறவினர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், 'போலி ஆவணங்கள் மூலம் டிரஸ்ட் சொத்துக்களை சிலர் அபகரித்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். புது சிறைச்சாலை ரோடு பகுதியில் உள்ள இடம் போலி 'பவர் பத்திரம்' பெற்ற கணேசன் என்பவர் மூலம் இந்திரா, பழனிவேலு, 55, உமாராணி,43, ஆகியோருக்கு விற்கப்பட்டுள்ளது. ஜமால் முகமது கடத்தப்பட்ட நாட்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பின் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இந்திரா, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள். இவரின் சித்தி உமாராணி. கொலை மற்றும் சொத்து வாங்கியது தொடர்பாக இன்ஸ்பெக்டர் இளவரசு நேற்று விசாரித்தார்.மோசடி செய்து, ஜமால் முகமதுவை மிரட்டி சொத்து வாங்கியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்திரா கைது செய்யப்படுவதை அறிந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஸ்டேஷன் முன் குவிந்தனர். இந்திராவையும், உமாராணியையும் பத்திரிகையாளர்கள் படம் எடுக்கக்கூடாது என்பதற்காக கேமரா முன் துண்டை உயர்த்தி பிடித்தனர். போலீஸ் வேனில் கண்ணாடிகளை இறக்குமாறு கூறினர். போலீஸ் வேனை சுற்றிலும் துண்டை வைத்து மறைத்துக் கொண்டனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications