தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
கோவை: தி.மு.க.வுக்கு வாக்களித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற அரசை வழங்குவோம் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
2-வது கட்ட நமக்கு நாமே பயணத்தில் இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் ஸ்டாலின் நடைபயணம் சென்றார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

ஆளும் அ.தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் செயலிழந்துவிட்டது. இந்த ஆட்சியில் மக்களின் துயரம்தான் அதிகரித்துள்ளது.
முந்தைய 2006-11ஆம் ஆண்டு தி.மு.க. ஊழலற்ற நல்லாட்சியை வழங்கியது. அதேபோல் 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு நீங்கள் வாக்களித்தால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை நடத்துவோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications